News August 18, 2025
திருப்பூர்: டிகிரி முடித்தால் வங்கி வேலை! APPLY

திருப்பூர் மக்களே..,அரசு பொதுத்துறை வங்கியான மகாரஷ்ட்ரா வங்கியில் பொது அதிகாரி(Generalist officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதர்கு ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News March 11, 2026
திருப்பூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்.
News March 11, 2026
திருப்பூரில் சோக சம்பவம்!

திருப்பூர் காந்திநகரை அடுத்த சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வர் செந்தில்குமார். இவருடைய மகன் விக்னேஷ் (22). இவர் ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முந்தினம் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விக்னேஷ் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
News March 11, 2026
வெள்ளகோவில் அருகே பயங்கர விபத்து

வெள்ளக்கோவில் – மூலனூர் சாலை கரட்டுப்பாளையம் அருகே நேற்று மாலை 6:25 மணிக்கு ஈச்சர் லாரி மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் புள்ளச் செல்லிபாளையத்தைச் சேர்ந்த சதீஷ் படுகாயமடைந்து, காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


