News August 18, 2025
வேலூர்: மக்கள் நலவாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேலூர் மாநகராட்சியில் செவிலியர், லேப் டெக்னீசியன், பார்மாஸிஸ்ட், எம்எல்ஹெச்பி, ஹெல்த் இன்ஸ்பெக்டர், UHN, MPHW கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆக.29ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் <
Similar News
News March 12, 2026
வேலூர் மக்களே சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News March 12, 2026
வேலூர் வன தீயை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஈர நிலங்களை பாதுகாப்பது மற்றும் வனப்பகுதிகளில் ஏற்படும் வன தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (மார்ச்.11) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
News March 12, 2026
வேலூரில் எம்எல்ஏ திடீர் ஆய்வு!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சதுப்பேரி ஏரி 20 கோடி ரூபாய் செலவில் சுற்றுலா தலமாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச்.11) அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


