News August 18, 2025
விநாயகர் சிலை கரைக்க அதிகாரிகள் உத்தரவு

நாடு முழுவதும் வருகின்ற 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. மேலும் மூன்றாவது நாளில் விநாயகர் சிலை கரைக்கப்படும். சேலம் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. விநாயகர் சிலையை அனுமதிக்கப்பட்ட நீர் நிலையங்களில் மட்டும் தான் கரைக்க வேண்டும் ரசாயனம் இல்லாத களிமண் சிலையை மட்டும் தயாரிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவு.
Similar News
News August 20, 2025
விவசாயிகளே உளுந்து விதை வேண்டுமா? இங்கே போங்க!

சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் அறிக்கையில்சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் எல்லா பருவ காலத்திலும் சாகுபடி செய்ய ஏற்ற வீரிய ரக வம்பன்-11 உளுந்து விதை விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விதைத்த 90 நாள் முதல், 110 நாள் வரையில் வறட்சி, நோய் தாங்கி வளர்ந்து, ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ வரை மகசூல் தரவல்லது. உளுந்து விதை தேவைப்படுவோர் 9944597160 அழைக்கலாம்.
News August 20, 2025
சேலம்: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 20, 2025
சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆவணி அமாவாசை, வார இறுதி நாட்களையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் வரும் ஆக.22- ஆம் தேதி முதல் ஆக.25- ஆம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை, பெங்களூரு, ஓசூர், கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.