News August 17, 2025

கிட்னி விற்பனையை தொடர்ந்து கல்லீரல் விற்பனை

image

பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி விற்பனை நடைபெறுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இது குறித்து மருத்துவத்துறையினர் விசாரித்து வருகின்றனர் .இந்நிலையில் பள்ளிபாளையம் அலமேடு பகுதியில் உள்ள பெண் தொழிலாளி பேபி என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் 8 லட்ச ரூபாய் பணத்திற்காக தனது கல்லீரலை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News March 8, 2026

நாமக்கல்: பெண் பரிதாப பலி!

image

மோகனுார் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி செல்வம் (55). இவர் நேற்று முன்தினம் இரவு ஜங்களாபுரம் பிரிவு பகுதியில் இருந்து, சாலையை கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல் நோக்கி வந்த டூவீலர் செல்வம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்தவரை நாமக்கல் GH-ல் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மோகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 8, 2026

நாமக்கல் மக்களுக்கு ஓர் நற்செய்தி!

image

நாமக்கல் வழியாக வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்த சென்னை – போடி (20601/02) ரயில் இனி வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த, ரயிலை அடிக்கடி சென்னை செல்லும் நாமக்கல் ரயில் பயணிகள் முன்பதிவு செய்து பயன்படுத்தி பயன்பெறலாம். இதை, தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தவும்.

News March 8, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!