News August 17, 2025

கிட்னி விற்பனையை தொடர்ந்து கல்லீரல் விற்பனை

image

பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி விற்பனை நடைபெறுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இது குறித்து மருத்துவத்துறையினர் விசாரித்து வருகின்றனர் .இந்நிலையில் பள்ளிபாளையம் அலமேடு பகுதியில் உள்ள பெண் தொழிலாளி பேபி என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் 8 லட்ச ரூபாய் பணத்திற்காக தனது கல்லீரலை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 7, 2025

கொல்லிமலையில் அறிமுக கலை வகுப்புகள் தொடக்கம்!

image

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் விரிவாக்க மையம் கொல்லிமலை குழந்தைகளுக்கான அறிமுக கலை பயிற்சி வகுப்பு, கொல்லிமலை வல்வில் ஓரி கலையரங்கத்தில் நவம்பர் மாதம் முழுவதும், அனைத்து சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் அனைத்து பள்ளிகளில் பயிலும் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 6, 2025

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (06.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 6, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

image

நாமக்கல்லில் இன்று நவம்பர் 6ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது இதனால் இன்று 5 காசுகள் உயர்த்தப்பட்டது. எனவே இன்று ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.55 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது நேற்று ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது குறிப்பிடதக்கது

error: Content is protected !!