News August 17, 2025
துணை ஜனாதிபதி தேர்தல்: யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்?

கோவையை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா கவர்னராக உள்ளார். கோவை தொகுதியில் 1998 முதல் 2004 வரை MP-யாக இருந்த இவர், 2003 – 2006 வரை TN பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், 2004, 2014, 2019 லோக்சபா தேர்தல்களில் கோவையில் களமிறங்கியவர். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவரை பாஜக துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.
Similar News
News March 7, 2026
FLASH: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை 12.2% உயர்ந்துள்ளது. அதனால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை $90.90 ஆனது. அதன் தாக்கத்தாலேயே 10 மாதங்களுக்கு பிறகு இந்திய சந்தையில் <<19316790>>வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்<<>> விலை இன்று அதிகரித்தது. குறிப்பாக 2020 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கச்சா எண்ணெய் உச்சம் தொட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News March 7, 2026
விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை: அண்ணாமலை

மோடி தலைமையிலான 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எரிவாயு பயன்பாடு 45% அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, சமையல் எரிவாயு இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது. மொத்த பயன்பாட்டில், இறக்குமதி மட்டுமே 60% ஆக உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்படும்போது, நமது நாட்டிலும் விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
FLASH: விஜய் மனைவி சங்கீதா வேதனை!

செங்கல்பட்டு கோர்ட்டில் <<19319427>>சங்கீதா தாக்கல்<<>> செய்துள்ள புதிய மனுவில் பல்வேறு தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார். 26 வருடங்கள் விஜய் உடன் குடும்பம் நடத்தி 2 குழந்தைகளை பெற்று வளர்த்துள்ளதாகவும், நல்ல குடும்ப தலைவியாக இருந்ததாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்த விஜய், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.


