News August 17, 2025
திருப்பத்தூர்: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE
Similar News
News August 18, 2025
வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் உங்கள் வாகனங்களை பார்க்கிங் இடத்தில் நிறுத்தப்படும் போது, அந்த வாகனத்தில் உள்ளே மதிப்புமிக்க பொருள்களையோ, பணத்தையோ வைக்க வேண்டாம். அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
News August 18, 2025
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் அறிவிப்பு! 19.08.2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாட்றம்பள்ளி ஒன்றியம் பந்தாரப்பள்ளி ஊராட்சி, கந்திலி ஒன்றியம் விஷமங்கலம் ஊராட்சி, ஆம்பூர் நகராட்சி 14 வார்டு ஆலங்காயம் ஒன்றியம் வலையாம்பட்டு ஊராட்சி, ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலை ஊராட்சி திருப்பத்தூர் ஒன்றியம் ஏ.கே மோட்டூர் ஊராட்சியில் முகாம் நடைபெற உள்ளது.
News August 17, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பதூர் மாவட்டத்தில் இன்று (ஆக.17) இரவு ரோந்துப் பணிக்கான போலீஸார் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த ரோந்துப் பணி நடைபெறும். பொதுமக்கள் அவசர உதவி மற்றும் குற்றச் சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு நேரடியாகத் தகவல் தெரிவிக்கலாம்.