News August 17, 2025
சொத்து பதிவு இனி ரொம்ப ஈசி.. தமிழக அரசின் புதிய மாற்றம்

சொத்துகளை வாங்குவது, விற்பதில் உள்ள சிக்கல்களை குறைக்க ஆளில்லா பதிவு (Presenceless Registration) முறையை அறிமுகப்படுத்த TN அரசு தயாராகி வருகிறது. அதன்படி, சொத்துகளை விற்பவரோ, வாங்குபவரோ பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவு நடைமுறைகளை செய்ய முடியும். சார்பதிவாளர் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார். இந்தாண்டு இறுதிக்குள் இது நடைமுறைக்கு வருமாம். SHARE IT.
Similar News
News March 21, 2026
பொதுத்தேர்வு.. பள்ளிகளுக்கு புதிய உத்தரவு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், திங்கள் முதல் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது. *தேர்வர்களின் முகப்புத் தாள்கள் முதன்மை விடைத்தாள்களுடன் இணைக்கப்பட்டிருப்பதை தேர்வுக்கு முன்னரே உறுதி செய்ய வேண்டும். *சொல்வதை எழுதுபவர் நியமனங்களில் அன்றைய தேர்வு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. *அறை கண்காணிப்பாளராக 10-ம் வகுப்பு ஆசிரியர்களை நியமிக்க கூடாது.
News March 21, 2026
அதிமுக கூட்டணியை CSK உடன் ஒப்பிட்ட TTV தினகரன்

டெல்லியில் இருந்தே அதிமுக இயக்கப்படுவதாக ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், TTV புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். IPL-ல் தமிழ்நாட்டை CSK அணி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதற்கு தோனி கேப்டனாக உள்ளார். அதில் எத்தனை தமிழர்கள் உள்ளனர் என கேள்வி எழுப்பினார். முதலில் இதற்காக ஸ்டாலினை போராடச் சொல்லுங்கள் என்ற அவர், டெல்லி, தமிழ்நாடு என இனியும் பேசி மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.
News March 21, 2026
மரண பயத்தில் மனைவியை காதலனுடன் அனுப்பிய கணவர்

உ.பி., புலந்த்ஷரை சேர்ந்த ராஜ்குமாரின் மனைவிக்கு இன்னொருவருடன் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில், தன் மனைவியின் போனில் <<15809593>>புளூ டிரம்<<>> தொடர்பான ஸ்கிரீன் ஷார்ட்களை பார்த்த அவர், உடனே போலீஸுக்கு சென்று, ‘என் மனைவியின் போனில் இதெல்லாம் இருக்கு. அவ என்னை கொல்ல திட்டமிட்டிருக்கா… தயவுசெஞ்சு எங்கள பிரிச்சு விட்டுடுங்க…’ என கெஞ்ச, போலீஸும் பஞ்சாயத்து பேசி மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்தனராம்.


