News August 17, 2025
நெல்லை: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் நெல்லை மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 8220387754 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!
Similar News
News August 18, 2025
நெல்லை மக்களே ஆன்லைன் லோன் உஷார்…!

நமது நெல்லை மக்களே, உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என நெல்லை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது போன்று பலர் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். புகார்களுக்கு: 1930 அழையுங்க… நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு SHARE செய்து உஷார்படுத்துங்க…!
News August 18, 2025
நெல்லை மாவட்ட செயலாளருக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254வது நினைவு நாளை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி பாளையில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்பி சந்திரசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா செய்திட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
News August 17, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர், விபரம், காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.