News August 17, 2025
நீடாமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் சாமி தரிசனம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் முச்சந்தியம்மன் கோவிலில் ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) அன்று திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், வணிகர் சங்க தலைவர் செந்தமிழ்ச்செல்வன், ஆதி.ஜனகர் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News August 18, 2025
திருவாரூர்: 31-ம் தேதி வரை கால அவகாசம்!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் நகர், கோட்டூர் தட்டாங்கோவில் மற்றும் வண்டாம்பாளை, கிடாரங்கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு வருகிற 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க..
News August 18, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் (17.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!
News August 17, 2025
திருவாரூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!