News April 7, 2024
ஜன்னல் வழியாக இழுத்து தூக்கி வீசப்பட்ட இருவர் பலி

சீனாவின் தெற்கே ஜியாங்சி மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான புயல் வீசி வருகிறது. இதுவரையில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நான்சங்க் நகரில் 60 வயது மூதாட்டி மற்றும் அவரது 11 வயது பேரன் குடியிருப்பில் இருந்தபோதே படுக்கை விரிப்போடு சேர்த்து ஜன்னல் வழியாக இழுத்து தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News July 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News July 7, 2025
செம்மணி புதைகுழியில் 47 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

1994-ல் போரின்போது இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழர்கள் எலும்புகள், உடல் எச்சங்கள் யாழ்ப்பாணம்- அரியாலை – சிந்துப்பாத்தி பகுதிகளில் அகழாய்வுப் பணியின்போது கண்டெடுக்கப்பட்டது. அந்த வகையில், செம்மணி புதைகுழியில் இதுவரை 47 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
கல்லூரிகளில் இசை வெளியீடு: சசிகுமார் அதிருப்தி

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘பிரீடம்’. சத்யசிவா இயக்கிய இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பேசிய சசிகுமார் கல்வி நிறுவன வளாகங்களில் என்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவதில் உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தை பார்க்க அழைப்பதில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளார்.