News August 17, 2025
இன்று முதல் ₹5 லட்சம் வரை கடன் பெற முடியும்

தருமபுரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள CM ஸ்டாலின், இன்று விவசாயிகளுக்கு உடனடி பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை சற்றுமுன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பித்தால், வங்கி கணக்கில் நேரடியாக ₹5 லட்சம் வரை கடன் பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் தேவையற்ற அலைச்சல், காலதாமதம் குறையும் என்பதால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Similar News
News August 18, 2025
பிரபஞ்சம் மனிதர்களுக்கானது இல்லை: இயக்குநர் வசந்த்

டெல்லியில் தெருநாய்களை பிடித்து, நாய் காப்பகங்களில் ஒப்படைக்க SC உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து சென்னையில் நடந்த பேரணியில், ஆசை, நேருக்கு நேர் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த் பங்கேற்றார். நிகழ்வில் பேசிய அவர், பிரபஞ்சம் மனிதர்களுக்கு மட்டுமே இல்லை என்றும், அனைத்து உயிர்களுக்கும் சமமானது என்றார். தெருநாய்களை ஒரே இடத்தில் அடைத்து வைப்பது அனைத்திற்கும் தீர்வல்ல என்றார்.
News August 18, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 18 – ஆவணி 2 ▶ கிழமை: திங்கள் ▶ நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶ எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶ குளிகை: 1:30 PM – 3:00 PM ▶ திதி: சுன்யதிதி ▶ சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.
News August 18, 2025
விரக்தியின் உச்சத்தில் அன்புமணி: அமைச்சர்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் திமுக கூட்டணி தோற்றதால் இந்த மாவட்டத்தை ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என அன்புமணி தெரிவித்திருந்தார். இதுபற்றி பேசிய அமைச்சர் MRK பன்னீர் செல்வம், தருமபுரியை புறக்கணித்திருந்தால் 2024 லோக் சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு எப்படி 100 சதவீதம் வெற்றிக் கிடைத்திருக்கும் என கேட்டார். மேலும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் எனவும் விமர்சித்தார்.