News August 17, 2025
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மனநல மருத்துவமனைகள் மற்றும் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் பல மையங்கள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் புகார் வருகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உரிமைப் பெறாமல் இருந்தால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News August 18, 2025
தூத்துக்குடி இளைஞர்களே., அரசு தற்காலிக வேலைவாய்ப்பு

விளாத்திகுளம் பகுதியில் வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களை சர்வே எண், உட்பிரிவு எண் வாரியாக மின்னணு முறையில் கைபேசி மூலம் பயிர் கணக்கீட்டாய்வு செய்வதற்கு விருப்பம் உள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஊதியமாக ஒரு சர்வேக்கு ரூ.19 வழங்கப்படும். விருப்பமுள்ள இளைஞர்கள் விளாத்திகுளம் வட்டார வேளாண்மைதுறை அலுவலகம்அல்லது வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News August 18, 2025
தூத்துக்குடி ஹலோ போலிஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிகளை கண்காணிக்கவும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றிய விவரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது
News August 17, 2025
தூத்துக்குடியில் நாளையுடன் கடைசி! உடனே APPLY

தூத்துக்குடி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மையத்தில் சுகாதார பணியாளர் (MLHP) வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம் சார்ந்த பாடப்படிப்பு படித்து இருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000. <