News April 7, 2024
போக்சோ வழக்கில் இருந்து இளைஞர் விடுதலை

சாணார்பட்டி தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் (21). இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பாக 17 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் நந்தீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மீதான விசாரணை திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நந்தீஸ்வரன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணம் செய்யப்படாததால் அவரை விடுதலை செய்தனர்.
Similar News
News July 7, 2025
திண்டுக்கல்லில் பாவங்கள் போக்கி, வேலை தரும் கோவில்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் நகரில் காளஹஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலாகும். இங்கு வேண்டினால் ராகு, கேது தோஷம் நீங்கும், செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், இழந்த வேலை மீண்டும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், குழந்தை பாக்கியம் கிடைக்க கிருத்திகை நட்சத்திர நாட்களில் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். SHARE பண்ணுங்க!
News July 7, 2025
திண்டுக்கல்லில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 29 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974590>>தொடர்ச்சி<<>>
News July 7, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!