News August 17, 2025
ஆகஸ்ட் 17: வரலாற்றில் இன்று

1934 – முரசொலி மாறன் பிறந்த தினம்.
1945 – ஜப்பானிடமிருந்து இந்தோனேசியா விடுதலை பெற்ற நாள்.
1947 – இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் கோடு வெளியிடப்பட்டது.
1962 – விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த தினம்.
1963 – திரைப்பட இயக்குநர் சங்கர் பிறந்த தினம்.
2008 – அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
Similar News
News March 7, 2026
ஈரான் போர்.. இந்தியாவில் இதன் விலை குறைகிறது

இந்தியாவில் விளையும் பாஸ்மதி அரிசியில் 72% மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது அங்கே போர்ச்சூழல் நிலவுவதால் 2 லட்சம் டன் பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவிலிருந்து கப்பல்களில் கொண்டுசெல்லப்பட்ட மேலும் 2 லட்சம் டன் அரிசியும் பாதிவழியிலேயே நிற்கிறதாம். இதன் காரணமாக இந்தியாவில் அதன் விலை 7% வீழ்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் குறையலாம்.
News March 7, 2026
விலை உயராது.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹114.50-ம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹60-ம் உயர்ந்தது. சிலிண்டர் உயர்வால், டீ, காபி விலைகள் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டீ, காபிகளின் விலை உயராது என்று பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
News March 7, 2026
BREAKING: ₹2,300 ஆக உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்தார்

TN அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் ₹1,000-லிருந்து ₹1,500 ஆகவும், நடுநிலைப்பள்ளியில் பணிபுரிவோருக்கு ₹1,500-லிருந்து ₹2,300 ஆகவும் ஊதிய உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சுமார் 38,000 பேர் பயனடைவார்கள் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.


