News August 16, 2025

திருவள்ளூரின் முதல் ரயில் சேவை எது தெரியுமா?

image

தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை 1856ம் ஆண்டு ராயபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டைக்கு இயக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து இரண்டாவது ரயில் திருவள்ளூருக்கு இயக்கப்பட்டது. முதலில் இயக்கப்பட்டு இருந்தால், தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை இயக்கப்பட்ட பெருமை திருவள்ளூருக்கு கிடைத்திருக்கும். தற்போதும் இரண்டாவது ரயில் சேவை, திருவள்ளூரின் முதல் ரயில்சேவை என்ற பெருமை உள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News March 5, 2026

திருவள்ளூரில் மின்சாரப் பிரச்னையா..? இங்க போங்க!

image

பெரியகுப்பத்தில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று(மார்ச் 5) காலை 11:00 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், மின்சாரம் சார்ந்த பிரச்னைகள், புகார்கள், கோரிக்கைகளை மனு மூலமாக அளிக்கலாம். ஆகையால், திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர், இதில் தவறாது கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உடனே அனைவருக்கும் SHARE!

News March 5, 2026

கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ நல உதவி!

image

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம்
ஏடூர் ஊராட்சிகும்புளி கிராமம் சார்பாக தெருமுனைக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகளை விழா இன்று நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 5, 2026

திருவள்ளூரில் கொடூரக் கொலை!

image

எல்லாபுரம் ஒன்றியம், மாகரல் ஊராட்சிக்குட்பட்ட சர்வேசா நகரில் வசித்து வந்தவர் சின்னப்பன்(50). இவர், மிக்சர் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், சின்னப்பனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ்(39) என்பவரின் மனைவி தேவியுடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன் தினம் இரவு சின்னப்பனை சுபாஷ், அவரது மகன் சக்திவேல்(19) கட்டையால் சராமாரியாக தாக்கியதில் சின்னப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!