News August 16, 2025

நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம்

image

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை விழுப்புரத்தில் 7936 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில்நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. விலங்குகளின் உமிழ்நீர் மூலம் பரவும் கொடிய நோயான ரேபிஸ் தற்போது அதிகமாக பரவி வருவதால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றால் ராபிஸ் பாதிப்பை தடுக்கலாம் என்று கூறுகின்றனர்

Similar News

News August 17, 2025

விழுப்புரம்: பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு

image

விழுப்புரத்தில் இன்று(ஆக.17) நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சியின் தலைவராக தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள் எழுந்து நின்று கரங்களை தட்டி ஆதரவு தெரிவித்தனர். மேலும் 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News August 17, 2025

விழுப்புரத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தில் வரும் ஆக. 22ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 8th,10th, 12th ITI, அல்லது டிகிரி முடித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9442208674 எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

News August 17, 2025

விழுப்புரம் மக்களே கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க…

image

விழுப்புரம் மக்களே மற்றவர்கள் உங்கள் செல்போனை ஹேக் செய்வதில் இருந்து பாதுகாக்க சில டிப்ஸ் பற்றி காண்போம். ▶️ ஆப் ஸ்டோரிலிருந்து மட்டும் ஆப்ஸைப் பதிவிறக்கவும் ▶️பொது வைஃபையைப் பயன்படுத்த வேண்டாம் ▶️passwords-யை மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டாம் ▶️ உங்கள் ஆப்ஸைப்பை எப்போது அப்டேட்டில் வைத்திருங்கள். மேலும் புகாரளிக்க <>இந்த இணையதளம்<<>> அல்லது 1930 எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் IT

error: Content is protected !!