News August 16, 2025
ராணிப்பேட்டை: இலவச 5G பயிற்சி; ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் <
Similar News
News August 18, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (18.08.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இவர்களை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 18, 2025
ராணிப்பேட்டை: உங்க சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு!

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் BHEL நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சியாளர் (Trade Apprentice) பணிக்கு 261 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் வரும் ஆக.21 முதல் ஆக.23 வரை BHEL HRM கருத்தரங்க அறையில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ITI முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.12,000மும் குறைந்த விலையில் உணவும் வழங்கப்படும். மற்றவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News August 18, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரண்யா தேவி, நேர்முக உதவியாளர் ஏகாம்பரம், தனித் துணை ஆட்சியர் கீதாலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.