News August 16, 2025
JUST IN நெல்லையில் சுற்றுலா பயணி பலி

அம்பை அருகே ஆலடியூர் நதியுண்ணி கால்வாய் பகுதிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த பொன் சூரியன் என்பவர் குளிக்கும் போது மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கினார். வாலிபரை தேடும் பணியில் சேரன்மகாதேவி மற்றும் அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரது சடலத்தை மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News August 17, 2025
நெல்லை: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் நெல்லை மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 8220387754 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!
News August 17, 2025
நெல்லை: பேருந்தில் அதிக கட்டணமா? COMPLAINT பண்ணுங்க!

நெல்லை மக்களே! சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறைகள் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து வேலைக்கு செல்கீறீர்களா? அரசு கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளியுங்க..இங்கு <
News August 17, 2025
நெல்லை அடிப்படை வசதிகளுக்கு புகார் எண்!

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் அடிப்படை வசதிகளை தெரிவிக்கவே வணக்கம் நெல்லை என்ற Whatsapp சேனல் உருவாக்கபட்டுள்ளது. சேதமடைந்த சாலை, குடிநீர், சாக்கடை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை குறித்து “வணக்கம் நெல்லை” 97865 66111 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளியுங்க.. நீங்கள் அளிக்கப்படும் புகார்கள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கபட்டு தீர்வு காணப்படும். SHARE பண்ணுங்க..!