News August 16, 2025

திருச்சி: வீட்டு வசதி வாரியம் சலுகை அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட அனைத்து திட்டப்பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகளில் ஒதுக்கீடு பெற்று 2015 ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப்பெற ஒதுக்கீடுதாரர்கள் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை ஒரே தவணையாக செலுத்த வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 4, 2026

திருச்சி: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக Payment Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். அவ்வாறு வரலைவில்லை என்றால் கவலை வேண்டாம். HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பணம் வருவதற்கு 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். SHARE பண்ணுங்க!

News March 4, 2026

திருச்சி: லஞ்சம் பெற்ற மின் உதவி பொறியாளர் கைது

image

திருச்சி மாவட்டம் மருங்காபுரி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பார்த்திபன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து ரூ.5000 இலவச மின் விநியோகம் பெறுவதற்கு கையூட்டு பெறும்போது, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

News March 4, 2026

ஹிந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர்

image

திருச்சி தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட மேலாளர் அலுவலகத்தின் நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் கர்தவ்ய த்வார் என எழுதி உள்ளனர். இதனை கண்டித்து ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக, திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்தனர்.

error: Content is protected !!