News August 16, 2025
சுதந்திரம் அடைந்துவிட்டோம்.. 1947-ல் வெளிவந்த பேப்பர்!

இந்த ஒரு நாளுக்காக தான் இந்திய திருநாட்டில், பல பேர் ரத்தம் சிந்தினர். உயிர் போகும் தருவாயிலும், ‘சுதந்திரம் வேண்டும்’ என ஆங்கிலேயரிடம் கர்ஜித்தனர். ஆகஸ்ட் 15, 1947, இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என ‘The Hindustan times’ பேப்பரில் வெளியிடப்பட்ட தலையங்கம் இதுதான். இந்திய வரலாற்றில் என்றைக்கும் அழியாத ஒரு காகிதம் இது. உங்களுக்கு சுதந்திரம் தினம் என்றால் என்ன விஷயம் ஞாபகம் வரும்?
Similar News
News March 9, 2026
விஜய் போட்டியிடும் தொகுதி இறுதியானது

தவெக <<19333933>>வேட்பாளர்கள் <<>>பட்டியல் இறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் விஜய் போட்டியிட உள்ளதாகவும், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், ஸ்ரீரங்கத்தில் கு.ப.கிருஷ்ணன், கரூரில் மதியழகன், கோபியில் செங்கோட்டையன், வில்லிவாக்கத்தில் ஆதவ், மயிலாப்பூரில் வெங்கட்ராமன், எழும்பூரில் ராஜ்மோகன், அம்பத்தூரில் ஜே.சி.டி பிரபாகர் களம் காண இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News March 9, 2026
பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமா? அமைச்சர் விளக்கம்

கச்சா எண்ணெய் இருப்பு தொடர்பாக மத்திய அரசு விழிப்புடன் இருப்பதாக ராஜ்யசபாவில் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேற்காசிய போர் குறித்து பேசிய அவர், போரை PM மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், டெஹ்ரானில் உள்ள தூதரகம் இந்தியர்களை பாதுகாக்க முழுமையாக செயல்பட்டு வருவதாகவும் மேற்காசிய நாடுகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா விரும்புவதாகவும் அவர் கூறினார்.
News March 9, 2026
BREAKING: தவெகவில் இருந்து விலகுகிறாரா?

விஜய்யுடன் த்ரிஷா சென்றது ஒரு குடும்பத்தை கெடுக்கும் செயல் என்று நடிகையும், தவெக நிர்வாகியுமான ரஞ்சனா நாச்சியார் கூறியுள்ளார். மக்களின் மனநிலை குறித்தும், தவெக நிர்வாகிகளின் மனப்பக்குவம் குறித்தும் விஜய்க்கு ஒன்றும் தெரியாது எனவும் கடுமையாக விமர்சித்தார். மேலும், என் மேல் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்தால் கவலைப்பட மாட்டேன்; கட்சியில் இருந்து விலகி எனது சொந்த பணியை செய்வேன் என தெரிவித்துள்ளார்.


