News August 16, 2025
சுதந்திர தினத்தன்று 108 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு

சுதந்திர தினத்தன்று முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட நிறுவனங்கள் மீது பண்டிகை விடுமுறைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நேற்று தொழிலாளர் துணை ஆய்வாளர் நடத்திய ஆய்வில், 37 கடைகள், 64 உணவு நிறுவனங்கள், 7 மோட்டார் நிறுவனங்கள் என மொத்தம் 108 நிறுவனங்கள் முன் அனுமதி பெறாமல் செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
சேலம்: காதலன் கைவிட்டதால் இளம் பெண் விபரீதம்!

ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கோபிகா. இவர் 5 ஆண்டுகளாக இளம்பிள்ளையை சேர்ந்த கார்த்திகேன் (25) என்பரை காலலித்து வந்துள்ளார். இதன் பின்னர் திருமணம் செய்ய கார்த்திகேன் மறுத்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து உயிரிழந்தார். இது குறித்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்,காதலன் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News March 5, 2026
சேலம் கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!

2026-சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் 11 ரெகுலர் தாசில்தார்கள் உட்பட 45 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் பிருந்தாதேவி பிறப்பித்துள்ளார். இதில் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளின் தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், ஊரக வளர்ச்சித் துறையில் 210 பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இருவருக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (04.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


