News August 16, 2025

கள்ளக்குறிச்சியில் ஆடி கிருத்திகைக்கு இதை செய்யுங்க!

image

ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் கள்ளக்குறிச்சி கோட்டைமேடுவில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள முருகன் சிலை சுயம்புவாக தோன்றியது என நம்பப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் கர்ம வினைகள் நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 7, 2026

கள்ளக்குறிச்சி: கேஸ் விலை உயர்வு! ; மானியம் வரலையா?

image

கள்ளக்குறிச்சி மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

கள்ளக்குறிச்சியில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 7, 2026

சங்கராபுரம் அருகே தீயில் கருகி பலி!

image

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். அவரது மனைவி மண்ணாங்கட்டி(85). இவர் நேற்று முன் தினம் குளிப்பதற்காக சுடுதண்ணீர் வைக்க விறகு அடுப்பில் தீ பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக தீ அவரின் சேலையில் பிடித்தது. இதில், உடல் கருகி கடுமையாக தீக்காயமடைந்த அவரை, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!