News August 16, 2025
அரியலூர்: அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் சேர்க்கை நீட்டிப்பு

2025-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE IT NOW…
Similar News
News March 4, 2026
அரியலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News March 4, 2026
அரியலூர்: பாமகவினர் துண்டு பிரசுரம் விநியோகம்

அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ் மறவன் அறிவுறுத்தலின்படி, அன்புமணி ராமதாஸ் தரப்பைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அதன் ஒரு பகுதியாக நேற்று ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குவாகம், வல்லம், மருதூர், கொடுகூர் உள்ளிட்ட கிராம மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
News March 4, 2026
அரியலூர்: காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

அரியலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினருக்கு, அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3, 4வது பேட்ச் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு சிறந்து விளங்கி முதல், 2 மற்றும் 3-ம் இடம் பிடித்த காவல்துறையினரை அரியலூர் மாவட்ட எஸ்.பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று (மார்ச் 03) தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


