News August 16, 2025
வேலூரில் புயலை கிளப்பிய EPS

வேலூரில் பரப்புரையில் ஈடுப்பட எடப்பாடி பழனிச்சாமி, “அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் ‘காப்பி-பேஸ்ட்’ செய்து புதுப்பெயர் சூட்டி மீண்டும் வெளியிட்டு வருகிறார். அரசாங்கத்தின் தனிப்பட்ட சாதனை என்ற ஒன்றும் இல்லை. ஆட்சி முடியும் தருவாயில், விளம்பர நோக்கத்திற்காக தாயுமானவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது தேர்தலுக்கு முன் அரசியல் பயன்பெறும் முயற்சி” என விமர்சித்தார்.
Similar News
News August 17, 2025
வேலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். (ஷேர் பண்ணுங்க)
News August 16, 2025
வேலூர்: உலகின் மிகப்பெரிய வைடூரியம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் உள்ள ஸ்ரீசக்தி கணபதிக்கு கடந்த 2023ம் ஆண்டு ஒரே கல்லால் ஆனா வைடூரியம் பதிக்கப்பட்ட தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டது. இந்த கிரீடத்தில் உள்ள வைடூரியம் 880 கேரட் கொண்டது. இந்த வைடூரியம் தான் உலகிலேயே மிகப்பெரிய வைடூரிய கல்லாக கருதப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.5 கோடி. ஷேர் பண்ணுங்க.
News August 16, 2025
வேலூரில் இல. கணேசன் மறைவுக்கு அஞ்சலி

வேலூர் மாவட்ட பாஜக சார்பில் மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவையொட்டி பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அதிகாரி ஜெகதீசன், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ், வேலூர் பாஜக மாவட்ட செயலாளர் தசரதன், உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.