News April 7, 2024
நாட்டின் நிலக்கரி இறக்குமதி 13% அதிகரிப்பு

கோடைக்காலம் தொடங்கியதால் நாட்டின் மின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி பிப்ரவரியில் 13% அதிகரித்து 21.64 மில்லியன் டன்னாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் 19.15 மில்லியன் டன்னாக இருந்தது. கடந்த நிதியாண்டின் ஏப்ரல் – பிப்ரவரி காலக்கட்டத்தில் மொத்தமாக 880.72 மில்லியன் டன் நிலக்கரி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
3 நாள் STOP பண்ணுங்க… அதிசயம் நடக்கும்!

தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஒரு 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தினால், ஆச்சரியகரமான மாற்றம் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளைஞர்கள் சிலரை 72 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்தி சோதித்தனர். அப்போது அவர்களின் மூளை அதிசயிக்கத்தக்க முறையில் தன்னைத் தானே ரீபூட் செய்துகொண்டு சிறப்பாக செயல்பட்டதை கண்டறிந்தனர். நீங்களும் ட்ரை பண்ணலாமே?
News July 6, 2025
நக்சல்கள் எங்கள் தோழர்களே: திருமாவளவன் பேச்சு

மக்களின் உரிமைக்காக போராடும் நக்சல்கள் எங்கள் தோழர்கள்தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர்கள் குரலற்றவர்களுக்கான குரல் என தெரிவித்த அவர், நக்சல் தனிப்பட்ட லாபத்திற்காக போராடுவதில்லை எனவும் கூறியுள்ளார். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்திய இந்தியாவின் பிற வனப்பகுதிகளில் ஆயுதமேந்திய இயக்கங்களைக் குறிப்பிட்டு திருமா இவ்வாறு பேசியுள்ளார்.
News July 6, 2025
தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி நாளை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். இதனால், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் நாளை இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். TNSTC சிறப்பு பஸ்களையும் அறிவித்துள்ளது.