News August 16, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக P. ராமமூர்த்தி
நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி வேலுதேவன், அரூர் வான்மதி, பென்னாகரம் குமரவேல் மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்க
Similar News
News November 15, 2025
தருமபுரியில் 3 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்!

தருமபுரியில் வரும் நவ.18, 19, 20 ஆகிய தேதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார். அதன்படி, பாலக்கோடு, பாப்பாரபட்டி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி பேரூராட்சிகளிலும், பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட 68 பஞ்.,களிலும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
தருமபுரியில் ஐடிஐ தேர்வு நடக்கும் இடங்கள்!

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஐடிஐ லெவல் 2 தேர்வு நாளை (நவ.15) பி .பள்ளிப்பட்டி சீனிவாசா பொறியியல் கல்லூரி, பென்னாகரம் நல்லனூர் ஜெயம் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. நாளை முற்பகல் 9.30 மணி முதல் 12. 30 மணி வரை மற்றும் பிற்பகல் 2:30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும் இந்த தேர்வில், 250 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
News November 15, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.14) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன், தோப்பூரில் ஜீலான்பாஷா , மதிகோன்பாளையத்தில் குமார் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.


