News August 16, 2025
காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (15.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 16, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

காஞ்சிபுரம் போலீசார் இன்று (16.08.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் தனியாக செல்வோருக்கு கட்டாயம் உதவும் பகிரவும்*
News August 16, 2025
எம்எல்ஏ-வை சந்தித்து வாழ்த்து பெற்ற பேரூராட்சி தலைவர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி, அரசுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகச் சிறந்த பேரூராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டது. சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உத்திரமேரூர் பேரூராட்சித் தலைவர் சசிகுமார் மற்றும் செயல் அலுவலரிடம் இந்த விருதை வழங்கினார். விருதைப் பெற்ற சசிகுமார், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரிடம் காண்பித்து வாழ்த்துகள் பெற்றார்.
News August 16, 2025
காஞ்சிபுரத்தில் ஜூனியர் தடகளப் போட்டிகள்

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் இம்மாதம் 17ஆம் தேதி முதல் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் 14, 16, 18, மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்கள், செப்டம்பர் மாதம் வண்டலூரில் நடைபெறும் மாநில அளவிலான தேசிய ஜூனியர் தடகளப் போட்டிக்குத் தகுதி பெறுவர்.