News August 15, 2025

மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பயிலும் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில், Coffee with Collector கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (ஆக.15) நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையார் அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, பயிற்சி ஆட்சியர் மாலதி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Similar News

News August 16, 2025

இல.கணேசன் மறைவுக்கு வேல்முருகன் இரங்கல்

image

பண்ருட்டி எம்எல்ஏ-வும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில். “இனிய நண்பரும், பழகுவதற்கு எளியவருமான இல.கணேசனின் மறைவு, அவர் சார்ந்த இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

News August 16, 2025

கடலூர்: மனை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

கடலூர் மக்களே, அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், அவற்றை வரன்முறை செய்து கொள்ள அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <>onlineppa.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் கூடுதல் தகவல்களுக்கு உங்கள் அருகிலுள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெறலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News August 16, 2025

கடலூர் அருகே அரசு பேருந்து மோதி கல்லூரி மாணவர் பலி

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த கலியமலையை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் திலிப்குமார் (21). தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.2-ம் ஆண்டு படித்து வந்த திலிப்குமார் நேற்று பைக்கில் பொய்யாபிள்ளைசாவடி-காட்டுமன்னார்கோயில் சாலையில் சென்ற போது, எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் திலிப்குமார் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!