News August 15, 2025
மதுரை: 20 ரூபாய்க்காக பள்ளி மாணவி தற்கொலை..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளியில் (ஆகஸ்ட் 15) இன்று கொடியேற்ற நிகழ்வுக்கு செல்ல 20 ரூபாய்க்கு கேட்ட மாணவிக்கு தாய் பணம் தர மறுத்ததால், மாணவி ராஜராஜேஸ்வரி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 20 ரூபாய்க்காக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செக்கானூரணி போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 16, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 16, 2025
இயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. கடிதம்

இரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி எழுதிய கடிதத்தில்; “தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழி உள்ளிட்ட 3 மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்பது விதி. ஆனால் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே இரயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது. தமிழ் கேள்வித்தாளுடன் மறு தேர்வு நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
News August 16, 2025
மதுரை: மத்திய அரசில் 201 காலிப்பணியிடம்

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <