News August 15, 2025
கள்ளக்குறிச்சி: இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வழி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் அருகே அதுல்யநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 7ஆம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயிலாகும், இந்த கோயிலில் பக்தர்களுக்கு அருள் தரும் சிவன் பெருமானை சனிக்கிழமைகளில் வழிபடுவதன் வழியே இழந்த சொத்துக்கள், அந்தஸ்த்து மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது, மேலும் உடலில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து ஆரோக்கியமாக இருக்கலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 16, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட இரவு நேர ரோந்து பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15.08.2025) இரவு 10 மணி முதல், நாளை சனிக்கிழமை (16.08.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News August 15, 2025
தென்தொரசலூரை சார்ந்த மூதாட்டி பலி

தென்தொரசலூரை சேர்ந்த தங்கம்மாள் ஆகஸ்ட் 9-ம் தேதி அந்த கிராமத்தில் உள்ள குளத்துக்கு அருகே 100 நாள் வேலை திட்டத்திற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வாழியே சென்ற காட்டனந்தல் பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் தங்கம்மாள் மீது பைக்கால் தெரியாமல் மோதியுள்ளார். இதில் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News August 15, 2025
விஐபி கார்டன் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு

கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை கள்ளக்குறிச்சி விஐபி கார்டன் முன்பு நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் இருசக்கர வாகனம் கிடைக்காத நிலையில் இது தொடர்பாக சரத்குமார் இன்று கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.