News April 7, 2024
ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

நாமக்கல், ராசிபுரம் அருகே மல்லூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஈச்சர் வாகனத்தில் சோதனை செய்த போது, 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகள் இருந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து ராசிபுரம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டுச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.7.86 கோடி ஆகும்.
Similar News
News October 27, 2025
நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு !

நாமக்கலில் இருந்து நாளை (அக்.28) இரவு 8:45 மணியளவில் ஓசூர், பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 06238 இராமநாதபுரம் – மைசூர் ரயிலிலும் டிக்கெட்டுகள் உள்ளன. பொதுமக்கள் இந்த ரயில்களை முன்பதிவு செய்து பயன்படுத்தி பயனடையுமாறு ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News October 27, 2025
நாமக்கல்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

நாமக்கல்லில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க <
News October 27, 2025
நாமக்கல்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

நாமக்கல் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இன்று முதல் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தைகளுக்கு திரவம் அளிக்க வேண்டும்.SHAREit


