News August 15, 2025
2050-ல் ₹1 கோடியின் மதிப்பு என்ன?

இன்று உங்கள் கையில் ₹1 கோடி இருந்தால், 2050-ல் அதன் மதிப்பு ₹29.53 லட்சத்திற்கு சமமாக இருக்கும். இன்று ₹1 கோடிக்கு கிடைக்கும் வீடு, 2050-ல் ₹3.4 கோடியாக இருக்கும். இதற்கு காரணம் பணவீக்கம். பொருட்களின் விலை அதிகரித்து மக்களின் வாங்கும் திறன் குறையும். கடந்த 20-25 ஆண்டுகளில் சராசரி பணவீக்கம் 6%-க்கும் அதிகமாக உள்ள நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு 5% என்று தொடர்ந்தால் கூட மேற்கூறியதுதான் நடக்கும்.
Similar News
News March 19, 2026
தமிழகத்தைச் சேர்ந்தவர் இந்திய தூதராகிறார்

சீனாவுக்கான இந்திய தூதராக விக்ரம் கே.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர், 1992 பேட்ஜ் இந்திய வெளியுறவு சேவை அதிகாரி ஆவார். பத்திரிகை துறையிலும் பணியாற்றிய இவர், சீனம், பிரெஞ்சு, கொரிய மொழிகளிலும் புலமை பெற்றவர். 2002-ல் பிரதமரின் தனிச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது UK-வின் இந்திய உயர் ஆணையராக உள்ள நிலையில், புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
News March 19, 2026
BREAKING: மகளிருக்கு நாதகவின் தேர்தல் வாக்குறுதி!

நாம் தமிழர் கட்சியில் மகளிருக்கு பல்வேறு வாக்குறுதிகளை சீமான் அளித்துள்ளார். குறிப்பாக, பெண்களுக்கு தனித்தொகுதி, அரசு வேலைகளில் மகளிருக்கு சரிபாதி இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் அதில் இடம் பெற்றுள்ளன. திமுகவும், அதிமுகவும் வாக்குகளை விலைக்கு வாங்க பணம்(₹2,000) அறிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி பெண்களின் உரிமைக்காக, தான் இந்த வாக்குறுதிகளை வெளியிடுவதாக சீமான் கூறியுள்ளார்.
News March 19, 2026
பள்ளி சிறுமிக்கு திமுக நிர்வாகி பாலியல் தொல்லை

செங்கல்பட்டு அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் திமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். திமுகவில் கிளைக் கழக நிர்வாகியாக உள்ள சிவா, சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக பைக்கில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் மேல்மருவத்தூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


