News August 15, 2025
அப்பா மன்னித்து விடுங்கள்.. உருக்கமான தற்கொலை கடிதம்

அப்பா தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் உங்கள் மீது அவதூறு சுமத்தப்பட்டுள்ளது. நான் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். ஜார்க்கண்ட் பலாமுவில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் சுஷாந்த்(30) தனது தற்கொலைக்கு முன்பு எழுதிய வரிகளை இவை. மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் மன அழுத்தத்தில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
Similar News
News August 15, 2025
பொதுத்தேர்வு ரத்துக்கு இதுவே காரணம்.. அமைச்சர் விளக்கம்

11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்தது ஏன் என அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 11-ம் வகுப்பு அடித்தளமாக இருக்க வேண்டுமே தவிர, மன அழுத்தத்தை கொடுக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக கல்வி திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவித்த அவர், பள்ளிகளில் ஹிந்தி திணிப்பை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.
News August 15, 2025
திமுகவில் இணைகிறாரா அதிமுகவின் தம்பிதுரை?

அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான், மைத்ரேயன் என அடுத்தடுத்த அதிமுக தலைவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில் தம்பிதுரையும் திமுகவில் சேரப் போவதாக, புகழேந்தி குண்டை தூக்கி போட்டுள்ளார். மேலும், பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே தங்கமணி திமுகவில் இணைவதாக செய்தி பரவிய நிலையில், அதனை அவர் மறுத்தார்.
News August 15, 2025
தலைமுறைகள் கடந்து தாக்கம் ஏற்படுத்திய ரஜினி: PM வாழ்த்து

திரையுலகில் ரஜினி 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை PM மோடி வாழ்த்தியுள்ளார். திரைப்படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து தலைமுறைகள் கடந்தும் ரஜினி மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அவரது திரைப்பயணம் சிறப்பு மிக்கதாக இருப்பதாகவும் PM மோடி தெரிவித்துள்ளார். மேலும், இனிவரும் காலங்களிலும் தொடர் வெற்றிகளை பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் வாழவும் வாழ்த்தியுள்ளார்.