News August 15, 2025
கடலூர் மக்களே புகாரளிக்க இதை குறித்து கொள்ளுங்கள்!

கடலூர் மக்களே. நம் பகுதிகளில் சில சமையம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், அளவுக்கதிகமா நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இனிமேல் ஆட்டோக்களில் அதிகமான நபர்களை ஏற்றி செல்வதை பார்த்தால், உடனடியாக 04142-234035 என்ற எண்ணில் புகாரளியுங்கள். மேலும் உங்கள் பகுதி RTO அலுவலகத்திலும் புகாரளியுங்கள். SHARE IT!
Similar News
News November 10, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.9) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

குறிஞ்சிப்பாடி வடக்கு மேலூரை சேர்ந்தவர் அருள் குமார்(24). இவரது தந்தை இரண்டு மாதத்திற்கு முன்பு இறந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் அருள்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் நெய்வேலி போலீசார் அருள்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 9, 2025
கடலூர்: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<


