News August 15, 2025
புதிய காற்றழுத்தம்.. ஆகஸ்ட் 21 வரை மழை நீடிக்கும்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார், ஊத்துக்கோட்டையில் அதிகபட்சமாக தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையிலும் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்புள்ளதாம். வெளியே செல்லும்போது கவனம் தேவை நண்பர்களே!
Similar News
News August 15, 2025
INTERNET வந்து இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவு

3G, 4G, 5G எல்லாம் வந்தாச்சு… அடுத்து 6G எப்ப வரும்ணு காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், 1995-ல் இதே நாளில், இந்தியாவில் பொதுமக்களுக்காக இணைய சேவை அறிமுகமான போது, அதன் வேகம் 9.6 kbps மட்டுமே (விவரங்களுக்கு படத்தை பார்க்க). VSNL தான் ஆரம்பத்தில் சேவை வழங்கியது. அதன்பின் தனியார் நிறுவனங்கள் நுழைய, இன்று 70 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தினமும் இணையம் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
News August 15, 2025
மழை வெளுத்து வாங்கப் போகுது.. கவனமா இருங்க!

இன்று இரவு 10 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஆக. 21-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், நாளை வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க நண்பர்களே!
News August 15, 2025
தேச வளர்ச்சிக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்: PM

இல.கணேசனின் மறைவு செய்தி தனக்கு வலியை தந்ததாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க கடுமையாக பணி செய்ததாகவும், தேசத்தின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த தேசியவாதியாக அவர் நினைவுகூரப்படுவார் என்றும் இரங்கல் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் எனவும் இல.கணேசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.