News August 15, 2025
அரியலூர்: 31 காவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கல்

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில், 31 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். குற்றவாளிகளைக் கண்டறிதல் குழந்தை கடத்தல் போதைப் பொருள் ஒழிப்பு ஆகியவற்றில் சிறப்பாக பணி புரிந்த காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 15, 2025
அரியலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி உட்பட பலர் பங்கேற்றனர்.
News August 15, 2025
அரியலூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பயற்ணீசுவரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பயற்ணீசுவரர் சுவாமிக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News August 15, 2025
அரியலூர்: சுதந்திர தின விழாவில் பசுமை விருது

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வழங்கும் பசுமை முதன்மையாளர் விருது ரூ.1 இலட்சம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை குமிழியம் மரங்களின் நண்பர்கள் அமைப்பிற்கு வழங்கினார்.