News August 15, 2025

தாம்பரம் மாநகராட்சியில் 19 அலுவலர்கள் பணியிட மாற்றம்

image

தாம்பரம் மாநகராட்சியில் பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, 5 மண்டலங்களில் பணியாற்றும் மேலாளர், கண்காணிப்பாளர்கள், நிர்வாக அலுவலர், உதவியாளர்கள், இளநிலை & வருவாய் உதவியாளர்கள், பதிவு எழுத்தர் உள்ளிட்ட 19 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே முரளி மற்றும் ரமேஷ் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 15, 2025

செங்கல்பட்டு: உள்ளூரிலேயே 25,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில்Assembly Line Machine Setter பணிக்கான 40 காலிப்பணியிடங்கள் உள்ளது. பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க பிரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க

News August 15, 2025

நடுவானில் விமானத்தில் கோளாறு

image

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று (ஆக.14) 166 பயணிகளுடன் கோழிக்கோடு வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது இதையடுத்து அவசர அவசரமாக விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நள்ளிரவு 12.10 மணியளவில் தரையிறக்கப்பட்டது. தற்போது விமானத்தின் கோளாறு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மாலை விமானம் கோழிக்கோடு புறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

News August 15, 2025

ஞாயிறு அட்டவணைப்படி இன்று ரயில்கள் இயங்கும்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று (ஆகஸ்ட் 15) சென்னை மற்றும் செங்கல்பட்டு இடையே புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படுகின்றன. இதனால், வழக்கமான நாட்களை விட 40% ரயில்கள் குறைக்கப்பட்டிருக்கும். பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை இதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!