News August 15, 2025

ஞாயிறு அட்டவணைப்படி இன்று ரயில்கள் இயங்கும்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று (ஆகஸ்ட் 15) சென்னை மற்றும் செங்கல்பட்டு இடையே புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படுகின்றன. இதனால், வழக்கமான நாட்களை விட 40% ரயில்கள் குறைக்கப்பட்டிருக்கும். பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை இதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News March 7, 2026

செங்கை: சனி தோஷம் நீக்கும் அற்புத கோவில்

image

பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அகத்தியருக்கு, சிவன் சுயம்புவாக தோன்றி காட்சியளித்ததாகவும், சனீஸ்வர பகவானே இத்தல இறைவனை வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. ஏழரைச் சனி, பாதச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என எந்த வகையான தோஷமாக இருந்தாலும், இங்கு வழிபட்டால் நிவர்த்தியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 7, 2026

பட்ஜெட் நிதியில் 30% கொள்ளை – விஜய்

image

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய விஜய், “தமிழக பட்ஜெட்டுக்கான நிதியில் 30% முதலமைச்சருக்காக ஒதுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் “காசில்லை காசில்லை என்று கூறிவிட்டு விடியற்காலையில் ரூ.5,000 மக்களுக்கு வழங்கியது எப்படி? ஸ்டாலின் சார் Tax-ஐ ஒழித்தாலே மக்களுக்கு பணத்தை வழங்க முடியும்” என்றார். விஜய்யின் இந்த குற்றசாட்டை நீங்க எப்படி நினைக்கிறீங்க?

News March 7, 2026

தவெக தலைவர் அறிவித்த வாக்குறுதிகள்

image

▶️திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம், பட்டுப் புடவை வழங்கப்படும்
▶️அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம்
▶️மாணாக்கரின் தாய் (அ) பாதுகாவலருக்கு ரூ.15,000
▶️பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம்
▶️தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்
▶️பொது போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Smart panic button

error: Content is protected !!