News August 15, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தற்போது புதிதாக ‘ஸ்டார்லிங்க்’ என்ற செயலியில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என 100க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஆன்லைனில் வரும் எந்தவித முதலீடு தொடர்பான செயலிகளை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.”

Similar News

News August 15, 2025

புதுச்சேரியில் மூன்று பேருக்கு ஜனாதிபதி விருது!

image

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை போன்றவற்றில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டு புதுச்சேரி போலீஸ் ஐஜி அஜித்குமார் சிங்லா, மாகி எஸ்பி சரவணன் மற்றும் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது. அதனை இன்று முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின விழாவில் வழங்கினார்

News August 15, 2025

நவோதயா வித்யாலயா பள்ளி சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு

image

காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா முதல்வர் கண்ணதாசன் நேற்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “வரும் 2026-27ம் கல்வியாண்டில் ஜவகர் நவோதயா வித்யாலயாவில் 6ம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கால வரம்பு, வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வாளர்கள் www.navodaya.gov.in அல்லது https:// cbseitems.rcil.gov.in/nvs என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.” என கூறியுள்ளார்.

News August 15, 2025

ஆசைவார்த்தை கூறி புதுச்சேரியில் பல கோடி ரூபாய் மோசடி

image

மல்டி லெவல் மார்க்கெட்டிங் அடிப்படையில், செல்போன் செயலியில் முதலீடு செய்தால் 30 நாளில் இரட்டிப்பு பணம் தருவதாக, சமூக வலைதளத்தில் தகவல் வைரலானதை நம்பி, புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த பலர், மர்ம நபர்கள் அனுப்பிய லிங்க்கில் இணைந்து கோடிக் கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இதில் ஏமாந்தவர்கள் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

error: Content is protected !!