News August 15, 2025
கவர்னர் மாளிகையில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

நாட்டின் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் கவர்னர் R.N.ரவி மூவர்ணக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு வந்திருந்த குழந்தைகள் உள்பட பலருக்கும் அவர் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து, காந்தி நினைவிடத்திற்குச் சென்று பூங்கொத்து வைத்து மரியாதை செலுத்தினார். <<-se>>#HappyIndependenceday<<>>
Similar News
News March 3, 2026
GALLERY: ரெஸ்ட்டில் இவ்ளோ வகைகளா?

ரெஸ்ட் எடுக்கணும் என்றால், சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றுதானே யோசிப்போம். ஆனால், மனிதர்களுக்கு பல்வேறு வகையான ரெஸ்ட் தேவை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மனித உடலையும், மூளையும் மீண்டும் ‘Reset’ பண்ணி, உற்சாகமாக உழைக்க, 6 வகையான ரெஸ்ட்களை எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றை என்னென்ன என அறிய, போட்டோவை Swipe பண்ணுங்க. உங்களுக்கு எந்த விதமான ரெஸ்ட் தேவைப்படுது?
News March 3, 2026
தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியான தகவல்

தமிழக தேர்தல் தேதியை ஒட்டுமொத்த வாக்காளர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மார்ச் 10-க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தேதி அறிவிக்கப்படலாம் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (மார்ச் 5) கேரளா செல்லும் CEC அடங்கிய குழு, 9, 10-ம் தேதிகளில் மேற்கு வங்கத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர். எனவே, அதன் பிறகு தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளனராம்.
News March 3, 2026
சாதி மோதல்களை திமுக வளர்த்து விடுகிறதா? அதிமுக

சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய திமுக அரசின் அலட்சிய போக்கால், நாங்குநேரியில் கொடூரக் கொலைகள் அரங்கேறியுள்ளதாக EPS விமர்சித்துள்ளார். தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை திமுக வளர்த்து விடுகிறதா எனவும் அவர் சாடியிருக்கிறார்.


