News April 7, 2024
புதிய உச்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,558.3 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின்படி, மார்ச் 29ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு 295.1 கோடி டாலர் உயர்ந்து 64,558.3 கோடி டாலராக உள்ளது. இதுவரை இல்லாத அளவில் அதிகபட்ச கையிருப்பு இதுவாகும். மதிப்பீட்டு வாரத்தில் தங்கம் கையிருப்பு 67.3 கோடி டாலர் அதிகரித்து 5,216 கோடி டாலராக உள்ளது.
Similar News
News January 29, 2026
தமிழக தேர்தல் தேதி விரைவில் வெளியாகிறது!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் முதல் (அ) 2-வது வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழகம், கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்து பிப்.4, 5-ல் ஆலோசனை நடத்துவதாக ECI அறிவித்துள்ளது. இதில் பங்கேற்குமாறு, தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்றவுள்ள IAS, IPS, உள்துறை செயலர்கள் ஆகியோருக்கும் ECI அழைப்பு விடுத்துள்ளது.
News January 29, 2026
மகா., DCM ஆகிறாரா அஜித் பவார் மனைவி?

அஜித் பவார் மறைவைத் தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவாரை மகாராஷ்டிர DCM-ஆக நியமிக்க NCP திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்கெனவே அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அஜித் பவாரின் மறைவால் காலியாக உள்ள பாராமதி தொகுதியில் அவரது மனைவி போட்டியிட வாய்ப்புள்ளது. மேலும், கட்சித் தலைவராக பிரஃபுல் படேல் பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.
News January 29, 2026
தங்கம் வாங்குவோருக்கு எச்சரிக்கை

தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. கள்ளச் சந்தையில் ‘வங்கதேச சிவப்புத் தங்கம்’ என்ற பெயரில் போலி தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளனர். அதில், காப்பர், நிக்கல், ஜிங்க் உள்ளிட்ட உலோகங்கள் மட்டுமே இருப்பதாகவும், துளிகூட தங்கம் இல்லை எனவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதனால், BIS ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளை வாங்காதீர்கள். உஷாரா இருங்க!


