News August 15, 2025

திருவள்ளூர் எம்பி சுதந்திர தின வாழ்த்து

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அவர் தனது வாழ்த்துச் செய்தியில், சுதந்திரத்தின் உண்மையான தத்துவங்களான சமத்துவம், சகோதரத்துவம், நேர்மை ஆகியவற்றை கடைப்பிடித்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News August 15, 2025

திருவள்ளூர்: உள்ளூரிலேயே 20,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன் தனியார் நிறுவனத்தில் TRAINEEக்கான 60 காலிப்பணியிடங்கள் உள்ளது. 12ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 15,000 முதல் 20,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க பிரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க

News August 15, 2025

திருவள்ளூர்: இலவச AI பயிற்சி, ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்!

image

திருவள்ளூர் மக்களே, AI துறையில் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கு, தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் இலவசப் பயிற்சி அளிக்கிறது. இதற்கு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, அல்லது டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட் போன்ற பணிகளுக்கு, ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் வரை சம்பளத்துடன் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

News August 15, 2025

தேசியக்கொடி ஏற்றிய ஆட்சியர் பிரதாப்!

image

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில், ஆட்சியர் பிரதாப் தேசியக்கொடி ஏற்றினார். எஸ்.பி. விவேகானந்த சுக்லாவுடன் இணைந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மூவர்ண பலூன்கள், சமாதானப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. காவல்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

error: Content is protected !!