News August 15, 2025
சிறுமி வன்கொடுமை; வாலிபருக்கு சாகும் வரை சிறை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை சேர்ந்தவர் அரவிந்த்(20). இவர் கடந்த 7.3.2020அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று அந்த மனித மிருகத்திற்கு வாழ் நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து, தி.மலை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
காட்டாற்று வெள்ளத்தில் பலியானோருக்கு அரசு நிதி உதவி

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே பருவதமலை
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இந்திரா (53), தங்கத்தமிழ் (34) என்ற இரு பெண்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவின் பேரில், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.4 லட்சம் வழங்க மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
News August 15, 2025
BREAKING: தி.மலை- வரதட்சணை கொடுமையால் தற்கொலை?

ஆரணி அருகே லோகநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரோகிணி என்பவர் திருமணமாகி 8 மாதம் மட்டுமே ஆகும் நிலையில், இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன் லோகநாதனின் பெற்றோர் வரதட்சணை கேட்டதாக கூறப்படும் நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு வரதட்சணை கொடுமையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
News August 15, 2025
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆயுள் தண்டனை

கீழ்பென்னாத்தூர் அருகே கார்ணம்பூண்டி கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (20), 2020-ஆம் ஆண்டு 8 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை நடத்திய வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காஞ்சனா, ஆகஸ்ட் 14 நேற்று அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.