News August 15, 2025
அரியலூர்: 28 அரசு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ் நாடு கூட்டுறவு துறையின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’28’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News August 15, 2025
தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியர்

அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, ஆட்சியரும் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டனர். மேலும், காவல்துறையில் சிறப்பாகப் பணி புரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
News August 15, 2025
அரியலூர் மாவட்டத்தின் தனிச்சிறப்பு தெரியுமா?

சுண்ணாம்புக் கல், மணல் கற்கள், பாஸ்பேட் முண்டுகள் மற்றும் சில கனிமங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. சுண்ணாம்புப் படிமங்கள், அரியலூர், செந்துறை வட்டங்களில் காணப்படுகின்றன. உடையார்பாளையம் வட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம், பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் செறிந்த பகுதியாகும். இப்படியாக, கனிம வளங்கள் நிறைந்த மாவட்டமாக அரியலூர் உள்ளது.
News August 14, 2025
அரியலூர்: ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு

அரியலூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டை உடனே பதிவு செய்து பெற முடியும். மேலும் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம்.SHARE NOW