News August 15, 2025
விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு: CM

விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை ₹22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் 2-ம் உலகப்போரில் பங்கேற்றவர்களுக்கான ஓய்வூதியம் ₹15,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் கூறியுள்ளார். தியாகிகள், போராளிகளுக்கு மணிமண்டபம், சிலைகள் பெரும்பாலும் திமுக ஆட்சியிலேயே அமைக்கப்பட்டதாகவும் சுதந்திர தின உரையில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 15, 2026
விஜய் தனித்து விடப்பட்டார்: சீமான்

ஆட்சியில் பங்கு தருகிறோம் என அழைத்தும் யாரும் வராததால் விஜய் தனித்து விடப்பட்டார் என்று சீமான் கூறியுள்ளார். கூட்டத்தோடு நிற்க யாருக்கும் வீரமோ, துணிவோ தேவையில்லை என்ற அவர், தாங்கள் (நாதக) வீரர்கள், எனவே தனித்து நிற்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தாங்கள் மக்களை முழுமையாக நம்புவதாகவும், அவர்கள் கட்சியையும் தலைவர்களையும் நம்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 15, 2026
விஜய் தனித்து விடப்பட்டார்: சீமான்

ஆட்சியில் பங்கு தருகிறோம் என அழைத்தும் யாரும் வராததால் விஜய் தனித்து விடப்பட்டார் என்று சீமான் கூறியுள்ளார். கூட்டத்தோடு நிற்க யாருக்கும் வீரமோ, துணிவோ தேவையில்லை என்ற அவர், தாங்கள் (நாதக) வீரர்கள், எனவே தனித்து நிற்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தாங்கள் மக்களை முழுமையாக நம்புவதாகவும், அவர்கள் கட்சியையும் தலைவர்களையும் நம்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 15, 2026
வைரமுத்துவுக்கு வாழ்த்து.. ரஜினி, கமலை சாடிய சின்மயி

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதற்கு கமல் & ரஜினி வாழ்த்து கூறியிருந்தனர். இந்நிலையில், கமலின் பதிவை டேக் செய்த சின்மயி, சினிமாவில் செல்வாக்குடன் இருக்கும் ஆண்கள் அரசியலுக்கு மாறும்போது பாலியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டோம் என தெரிவிக்கும் பெண்களை கண்டும் காணாமல் புறக்கணிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், ‘அய்யோ புரியவே புரியாதா?’ என ரஜினிக்கும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


