News August 15, 2025

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது.

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றும் போது வெடிகுண்டு வெடிக்கும் என நேற்று (ஆக. 14) காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் தொடர்புக் கொண்டு மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்தனர். தொழிலில் நஷ்டம் அடைந்த விரக்தியில் மது போதையில் இவ்வாறு செய்தது தெரியவந்தது.

Similar News

News March 10, 2026

செங்கல்பட்டு: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

செங்கல்பட்டு வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

News March 10, 2026

செங்கை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

செங்கல்பட்டு மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக் <<>>செய்து புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News March 10, 2026

செங்கல்பட்டு: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!