News August 15, 2025
சென்னையில் பாதுகாப்பு பணியில் 9,100 போலீசார்!

தமிழக முதல்வர் சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா உரையாற்றவுள்ளார். இந்த நிலையில் சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை & அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், 9.100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News March 5, 2026
சென்னை: நடிகை உடை மாற்றும் போது எட்டிப் பார்த்த நபர்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வரும் 31 வயதான நடிகை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நடிகை உடைமாற்றும் போது ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் பார்த்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. நடிகை கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் ராணுவ வீரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 5, 2026
விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் – ஜெயக்குமார்

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது விஜய் தன்னைப் போல பத்திரிகையாளர்களை சந்தித்து கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும், எழுதிக் கொடுக்கப்பட்டதை வாசிப்பது போதாது என்றார். அரசு பணத்தை திமுக அதிகமாக செலவிட்டாலும் வரும் தேர்தலில் தோல்வியடையும் என்றும், 5 ஆண்டுகளாக சிறுபான்மையின மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்ந்துள்ளது என கேள்வி எழுப்பினார்.
News March 4, 2026
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா?

பார்வதி தேவி சிவனிடம் திருநீறு பற்றி விளக்க கேட்க, சிவன் விளக்கமளித்தார். அங்கு மயில் ஆடுவதை பார்க்க, சிவன், ‘நீ மயில் உருப்பெற்றிடுவாய்’ என பார்வதிக்கு சாபமிட்டார். இங்கு புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை தேவி வழிபட்டதால் சாபம் நீங்கியது. இது மயிலை என்றானது. இங்கு ஈசனை வழிபடுவோருக்கு மன நிம்மதி கிடைப்பதுடன், உடல் சார்ந்த எந்த நோயாக இருந்தாலும் இங்கு வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை. ஷேர்!


