News August 15, 2025

2 ஹெலிகாப்டர்களிலிருந்து PM மோடிக்கு மலர் தூவப்படவுள்ளன

image

இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு PM மோடி உரையாற்றயுள்ளார். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவில் பிரதமர் மோடி கொடியேற்றும் போது 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5,000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

Similar News

News August 15, 2025

விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு: CM

image

விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை ₹22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் 2-ம் உலகப்போரில் பங்கேற்றவர்களுக்கான ஓய்வூதியம் ₹15,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் கூறியுள்ளார். தியாகிகள், போராளிகளுக்கு மணிமண்டபம், சிலைகள் பெரும்பாலும் திமுக ஆட்சியிலேயே அமைக்கப்பட்டதாகவும் சுதந்திர தின உரையில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News August 15, 2025

11 நிமிடத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை.. செயலியால் அசத்தல்

image

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள, பிரத்யேக செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் 11 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அவசரம் 108 செயலியில் உங்களின் இருப்பிடத்தை உறுதிபடுத்தி தகவல் கொடுத்தால், விரைவாக சேவை கிடைக்குமாம். அவசர தேவைக்கு பயன்படுத்திகோங்க..

News August 15, 2025

எரிபொருள் தற்சார்பு: டிரம்புக்கு மோடி மறைமுக பதிலடி

image

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பெறுவதைச் சுட்டிக்காட்டி இந்தியாவுக்கு 50% வரிவிதித்துள்ளது USA. இந்நிலையில், சுதந்திர தின விழாவில் பேசிய PM மோடி, பெட்ரோல், டீசல், கேஸ் போன்றவற்றை இறக்குமதி செய்வதை குறைக்க வேண்டும் என்றார். எரிபொருள் பயன்பாட்டில் இந்தியா தற்சார்பு அடைய வேண்டும் என்றும் சூளுரைத்தார். டாலர்கள், பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு அல்ல என்று USA-க்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.

error: Content is protected !!