News August 15, 2025
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அன்பில் மகேஷ் சவால்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி கல்விச்சூழல் தொடர்ந்து சரிவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், உண்மையிலேயே தங்களுக்கு தமிழக அரசுப்பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி ‘தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதி என்னவானது?’ என கேளுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
Similar News
News March 4, 2026
காங்கிரஸுடன் கூட்டணி.. திமுகவினர் அதிருப்தியா?

திமுக-காங்., தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 36 தொகுதிகள் + 2 ராஜ்யசபா சீட் என்ற கணக்கிற்கு இறங்கிவந்த காங்கிரஸிடம், 28 + 1 கொடுக்க தயார் என திமுக தலைமை கூறியுள்ளது. ஆனால், காங்., கொடுக்கும் அழுத்தத்திற்கு பணியக்கூடாது என்றும் 27+ 1 கொடுப்பதே அதீதம் என்று ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
News March 4, 2026
₹5,083 கோடிக்கு ஒப்பந்தம்.. பலத்தை கூட்டும் இந்தியா

இந்திய கடலோர காவல்படை & கடற்படைக்கு ₹5,083 கோடிக்கு ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. Make In India திட்டத்தில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸிடம் 6 Mk-III வகை ஹெலிகாப்டர்களும், ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து ஷெட்டில் ஏவுகணைகளும் வாங்கப்படுகின்றன.
News March 4, 2026
ஈரானின் உயர் தலைவரானார் கமேனியின் மகன்

போரில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானின் புதிய உயர் தலைவராக முஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. இவர் கமேனியின் 2-வது மூத்த மகன் ஆவார். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை கொடுத்த அழுத்தத்தினால், ஷியா மதகுருக்கள் இவரை தலைவராக தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது. ஈரானில் பரம்பரை ஆட்சி முறை எதிர்க்கப்படும் நிலையில், முஜ்தபாவின் தேர்வு சர்ச்சையாகியுள்ளது.


