News August 15, 2025
சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

சென்னையில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தன்று தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாள்கள் தொடர் விடுறை வருவதால் சென்னையில் வசிக்கும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். மக்கள் ஒரே நேரத்தில் சென்றதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.
Similar News
News August 15, 2025
பிராட்வே கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

நாளை 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இச்சுகந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பிராட்வே கன்னிகாபரமேஸ்வரி கல்லூரி மாணவிகள் முகத்தில் இந்திய மூவர்ணக் கொடி வடிவங்களும், தேசியச் சின்னங்களும் தீட்டிக் கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.
News August 14, 2025
நாளை விருது வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவின்போது விருதுகள், காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில், சிறந்த மாநகராட்சிகளாக ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த நகராட்சிகளுக்கான விருதுகளுக்கு ராஜபாளையம், ராமேசுவரம், பெரம்பலூா் நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்மாநகராட்சி, நகராட்சிகளுக்கு நாளை விருதுகளை வழங்குகிறார்.
News August 14, 2025
சென்னை டு திருச்சிக்கு சிறப்பு ரயில்

3 நாள்கள் தொடர் விடுமுறையையொட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 11.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை வழியாக திருச்சிக்கு முன்பதிவு இல்லாத மெமு ரயில் இயக்கப்படுகிறது. இதே ரயில் வரும் 17-ம் தேதி இரவு 10.50 மணிக்கு திருச்சியிலிருந்து தாம்பரம் வரை இயங்கும். (SHARE)